தருமியும் சொக்கனும்

தருமி மெல்ல நடந்தபடியே சொக்கனிடம் கேட்டான்…

“கனவுகளை வெறுப்பவன் யாரோ?”
“தூக்கம் இழந்தவன்.”

“பயம் இல்லாதவன் யார்?”
“மதி இழந்தவன்.”

“கவலைகள் இழந்தவன் யார்?”
“வயது இல்லாதவன்.”

தருமி சற்றே தாமதிக்க, சொக்கன் பெரிதாக நகைத்தான்.

தருமி தொடர்ந்தான்…

“தொடர்ந்தும் முடிவது?”

“வாழ்க்கையும் ஆன்மாவும்.”


“முடிந்ததும் தொடர்வது?”
“பசியும் பிரமஞ்சமும்.”

“சென்றும் திரும்புவது?”
“சூரியனும் சிரிப்பும்.”

“மொழியின் அழகு?”
“மௌனத்தில்.”

“கவிதையின் அழகு?”
“பொருளில்.”

“கதையின் அழகு?”
“முடிவில்.”


இருவரும் கைலாயம் நோக்கி நடந்தனர்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s